×

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, காஞ்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே பல மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இருப்பினும், ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்கிறது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே பெய்யும் கோடை மழையால் மக்கள் நிம்மதி அடைந்து வருகின்றனர்.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, காஞ்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Goa ,Krishnagiri ,Meteorological Survey Center ,Chennai ,Meteorological Survey Centre ,Kowai ,Neelgiri ,Erodu ,Kanchi ,Tirupathur ,Tiruppur ,Tiruvannamalai ,
× RELATED அரசு, தனியார் நிலங்களில் நடவு செய்ய...